16 முறை தேர்தலில் தோற்றும் 17வது முறையாக தேர்தலில் போட்டியிடும் சாமியார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மதுராவில் உள்ள கடேஷ்வர் கோவிலில் தலைமை சாமியாராக இருந்து வருபவர் பக்கர் ராமாயணி (73). உள்ளூர் மக்கள் இவரை பக்கத் பாபா என அழைப்பது வழக்கம். பக்கர் பாபா பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். இதுவரை 8 பாராளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். ஆனால் அனைத்திலும் தோல்வி அடைந்து வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்கவில்லை.

இந்நிலையில், உ.பி.யின் மதுரா பாராளுமன்ற தொகுதியில் 17வது முறையாக போட்டியிடுகிறேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பக்கர் பாபா கூறுகையில், இது எனது 9-வது பாராளுமன்ற தேர்தல். மதுரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!