பைசர் முஸ்தபாவின் அதிரடி உத்தரவு!!!

விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் எச். எம். பி. பி. ஹேரத்தை பணி நீக்கம் செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உத்தரவிட்டுள்ளாதாக விளையாட்டுத்துறை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று ஆரம்பமாகியுள்ள தெற்காசிய கணிஷ்ட தடகள போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கும் வீர, வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆலோசகர்களுக்கு தேவையான தங்குமிட வசதிகளை சரியான முறையில் செய்து கொடுக்கத் தவறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடு காரணமாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வீர, வீராங்கனைகள் முகங்கொடுத்துள்ள அசௌகரியத்தை கருத்திற்கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் பணியை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!