இந்த நிலைமைக்கு கூட்டமைப்பே பொறுப்பு! – கஜேந்திரகுமார்

இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது, நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

“இரண்டு வருடங்களுக்கு பிரியோசனம் இல்லாத ஒரு சபைக்குள் பாதிக்கப்பட்டுள்ள நாம் முடக்கப்பட்டுள்ளோம். கடந்த இரண்டு வருடங்களாக வீதியில் போராடிவரும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவொரு பாரிய பின்னடைவு. எமது மக்களை ஏமாற்றும் வகையில் இது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!