தொடுபேசியில் கேம் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு!!

மின் ஏற்றியபடியே தொடுபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், தொடுபேசி வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்தச் சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் குத்ராப்பரா என்ற கிராமத்தில் நடந்தது. 12 வயதான சிறுவன் ரவி சோன்வான் வீட்டில் தொடுபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். தொடுபேசிக்கு மின் ஏற்றியபடியே கேம் விளையாடிக் கொண்டிருந்தான். ஏற்கனவே சூடாகி இருந்த தொடுபேசி மின் ஏற்றியதால் மீண்டும் சூடானது.

இந்நிலையில் தொடுபேசி வெடித்தது. சிறுவன் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்தச் சம்பவத்தால் சிறுவனின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!