கொலம்பியாவில் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிறுவன்!

கொலம்பியாவில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் 14 வயது சிறுவன் மேலும் இருவரை சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெடல்லின் ((Medellin)) என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறிய கடையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த சிறுவனை கடையின் உரிமையாளர் வெளியேற்றினார். அப்போது அந்தச் சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் கடைக்காரரும், அருகில் இருந்த நபர்மீதும் தாக்குதல் நடத்தியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, கடந்த சில வாரங்களுக்கு முன் கொலம்பியாவில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அந்தச் சிறுவனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடியை சிறுவனை போலீசார் தேடிவருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!