உள்நாட்டுப் பொறிமுறை நீதியைப் பெற்றுத்தராது!

உள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தராது என்று வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “குற்றமிழைத்தவர்கள் தண்டனையைப் பெற வேண்டுமென கூறுகின்றனர். அதற்கு முதலில் விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

“உள்நாட்டு பொறிமுறை மூலம் எமது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது. ஆகவே சர்வதேச விசாரணை அவசியம். குற்றமிழைத்தவர்கள் தண்டனையைப் பெற வேண்டுமென கூறுகின்றனர். அதற்கு முதலில் விசாரணைகள் இடம்பெற வேண்டும். அந்த விசாரணைக்கு பன்னாட்டு பொறிமுறைகள் உள்ளடக்கப்படவேண்டியது அவசியம். அதையே கூட்டமைப்பும் வலியுறுத்துகிறது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!