பெற்ற மகளின் மார்பகத்தில் சூடு வைத்த தாய்

லண்டனில் தன்னை விட தனது மகள் அழகாக இருக்கிறால் என்ற பொறாமையால் மகளின் மார்பங்களை இரும்பு கம்பியால் சூடுவைத்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன் மகள் அழகாக இருப்பதை விரும்பாத தாய் தன்னுடைய மகளின் மார்பகத்தை சூடுவைத்துள்ளார். இது ஒரு சடங்கு என்று அங்குள்ள மக்கள் கூறினாலும் பாதிக்கப்பட்டவரின் கருத்துப்படி துஷ்பிரயோகம் ஆன செயல் என்று கருதப்படுகிறது.

சிமன் என்ற இந்த பெண் லண்டனில் உள்ள மலைவாழ் பகுதியில் வசித்துவந்தார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த பெண் தன்னுடைய அவலநிலையை தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் 13 வயதாக இருக்கும் போதே இவருடைய மார்பகத்தை தனது தாய் பொசுக்கி விட்டாராம். டீன். ஏஜ். பருவத்தில் இப்படி அழகாக இருக்க கூடாது என்றும் அந்த பகுதி மக்களின் சடங்காக இது செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த இளம்பெண்ணை ஓரினச்சேர்க்கை செய்வதாகவும், தன்னை விட தனது மகள் அழகாக இருப்பதாக நினைத்து இரும்புக் கம்பியால் மகளின் மார்பகத்தை பொசுக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணை மார்பகங்களை சுற்றி இறுக்கமான பெல்ட் அணியுமாறு செய்துள்ளார். அப்பொழுது தான் கவர்ச்சியாக தெரியக் கூடாது என்பதற்காக இப்படி ஈவு இரக்கமற்ற காரியத்தை அவளது தாயார் செய்துள்ளார்.

இந்த இரக்கமற்ற சடங்கு சிமனின் வாழ்வை அப்பொழுது மட்டுமல்ல நீண்ட காலமாக பாதித்து வருகிறது. அவளது மார்பகங்கள் அழகு இழந்து போனதை விட அவளது வாழ்க்கையையே இது கேள்விக்குறி ஆக்கி விட்டது. அவளது மண வாழ்க்கை பாதிப்படைந்ததோடு தன் குழந்தைக்கு கூட தாய்ப்பால் கொடுக்க முடியாத அவல நிலையை அடைந்துள்ளார் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!