ராகுல்காந்தி மீது லேசர் குண்டு தாக்குதல் முயற்சி- காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை உத்தரபிரேதேசத்தில் அவர் போட்டியிடும் அமேதியில்வைத்து கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது

அமேதி தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு திறந்த வாகனத்தில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தவேளை அவரை கொலை செய்வதற்கான முயற்சி இடம்பெற்றதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ராகுல்காந்தி திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தவேளை அவரை நோக்கி லேசர் கதிர்கள் பாய்ந்தன என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

ராகுல்காந்தியின் தலையை நோக்கி பச்சை நிற லேசர் கதிர்கள் பாய்ந்து வந்தன என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஏழு தடவை ராகுல்காந்தி மீது லேசர் தாக்குதல் இடம்பெற்றது என தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி நீண்ட தூரத்திலிருந்து சுடும் துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!