பொள்ளாச்சி பாலியல் வழக்கு: “கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் உறுதி”!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த திருநாவுக்கரசு, சபரி, சதிஷ் மற்றும் வசந்தக்குமார் ஆகிய 4 பேரும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் புதன் கிழமை அன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் சரியா அல்லது தவறா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நால்வரிடமும் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. நான்கு பேரின் குடும்பத்தினரும் அங்கு வந்திருந்தனர். இந்த நிலையில் அவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!