விக்னேஸ்வரனின் படங்களை அகற்றுமாறு பாடசாலைகளுக்கு உத்தரவு!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோரின் படங்களை உடனடியாக அகற்றுமாறு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பாடசாலைகளுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் சகல பாடசாலைகளிலும் முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரின் படங்கள் தொங்க விடப்பட்டன. இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட படங்கள் மாகாண சபையின் ஆட்சிக் காலம் முடிந்த பின்பும் தொடர்ந்தும் காணப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதால் இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!