மருந்து வகைகளின் விலைத் தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள முக்கிய விடயம்..!

சந்தையிலுள்ள மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டதை அடைந்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் விலை கட்டுப்பாட்டுக்கு குழு இப்பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசாங்கம் இதுவரை 73 மருந்து வகைகளின் விலைகளை ஒழுங்குறுத்தியிருக்கின்றமை குறிப்பிடதக்கது.

இதற்கமைய, புற்றுநோயாளர்கள் பயன்படுத்தும் 95 சதவீதமான மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்கிறது. புற்றுநோய் மருந்துகளுக்கான விலை மனுக்கோரலின் போது சமர்ப்பிக்கக் கூடிய உயர்ந்தபட்ச விலை 95 ரூபாவாகும் என்ற சுற்றுநிரூபத்தையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

மேலும் 27 மருந்து வகைகளின் விலைகளும் ஒழுங்குறுத்தப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!