கடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை

அமெரிக்க பிட்காயின் முதலீட்டாளர்களான கோடீஸ்வர தம்பதி கடலில் கட்டிய வீடு தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் கூறி அவர்களுக்கு மரணதண்டனை வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

Chad Elwartowski என்னும் அமெரிக்க கோடீஸ்வரர் தனது காதலியான தாய்லாந்தைச் சேர்ந்த Supranee Thepdetஉடன் தாய்லாந்து கடல்பகுதியில் கடல் வீடு ஒன்றைக் கட்டியுள்ளதோடு தொடர்ந்து பல வீடுகளைக் கட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.

தாய்லாந்தின் பிட்காயின் பெண் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் Supranee, அந்த கடல் வீட்டில் அமர்ந்து மதுபானம் அருந்தும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதற்கிடையில் தம்பதியினர் மீது மரண தண்டன விதித்துள்ள தாய்லாந்து அரசு அவர்களை தேடுவதை தெரிந்தும் அவர்கள் தலை மறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!