கோத்தாவுக்கு சவால் விடும் யஸ்மின் சூகா!

முடிந்தால் அமெரிக்காவுக்கு வந்து காட்டுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஐக்கிய நாடுகளின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூகா சவால் விடுத்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைந்தால் அவரை கண்காணிக்க குழுவொன்று செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவின் திமிர்த்தனம் காரணமாகவே அமெரிக்காவில் வழக்கில் சிக்கினார் எனவும், முடிந்தால் இன்னுமொரு முறை அமெரிக்காவுக்கு வருமாறு தான் அவரிடம் தெரிவித்து கொள்கிறேன் என யஸ்மின் சூகா குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!