தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்ல, அரசியல் தலைமைகளே காரணம் – வீ.ஆனந்தசங்கரி

தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்ல, அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில், பிரபாகரன் நல்லெதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவர். கீழ் உள்ளவர்கள் செய்த தவறுகள் அத்தனையையும் தன்மேல் போட்டுக்கொண்டு, அத்தனை தவறுகளையும் தானே ஏற்றுக்கொண்டார். உண்மையில் சிறந்த தலைமைத்துவ பண்பை பிரபாகரன் கொண்டுள்ளார்.

தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் காரணமானவர் அல்ல. அன்றிருந்த அரசியல் தலைவர்களு முழுக்க முழுக்க காரணம் என அவர் இன்று கிளிநாச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்ப இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. இங்கு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பன்னிரெண்டாயிரம் காணி அனுமதி பத்திரங்களை வழங்கியமை தொடர்பிலும் அவர் இதன்போது கருத்து தெரிவித்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!