கொடும் பசியால் மண்ணை தின்ற 2 வயது குழந்தை உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் பசிக்கொடுமையால் குழந்தை ஒன்று மண்ணை தின்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அனந்தபூர் குதிபண்டலா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மகேஷ் – நீலவேணி. கடும் வறுமையில் வாடும் இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், நீலவேணி தனது சகோதரியின் 2 வயது குழந்தையையும் சேர்த்து வளர்த்து வந்துள்ளார். சில நாட்களாக உணவு கூட இல்லாமல் தவித்து வந்த நிலையில், அந்த 2 வயது குழந்தை பசிதாங்காமல் மண்ணை தின்று உயிரிழந்துவிடவே, செய்வதறியாமல் திகைத்தவர்கள் யாருக்கும் தெரியாமல் குழந்தையை புதைத்துள்ளனர்.

தகவலறிந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கடந்த வருடம் அவர்களது மூன்றாவது குழந்தையும் பசியால் மண்ணை தின்று உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களிடமிருந்த 4 குழந்தைகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர். பசிக்கொடுமையால் மண்ணை தின்று குழந்தை உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!