சிறுவர் இல்லத்தில் நடந்த கொடூரம் – உடல் ரீதியாக துன்புறுத்திய கன்னியாஸ்திரிகள்!!

சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த சிறுவர்கள் இருவரைக் கன்னியாஸ்திரிகள் சேர்ந்து கொடூரமாகக் கொடுமைப்படுத்திய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

கொலம்பியா போபாயன் நகரில் உள்ள சாண்ட கிளாரா சிறுவர் இல்லத்தில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

இங்கு 65 சிறுவர்கள் தங்கியுள்ளனர். இல்லப் பொறுப்பாளர்களாக சோர் இனிஸ் பெரிஸ் மற்றும் ரோசா எல்விரா ட்ரோசிஸ் ஆகிய இரு கன்னியஸ்திரிகள் உள்ளனர்.

இருவரும் சேர்ந்து இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

சிறுவர்களின் கைகளை எரிப்பது, அவர்களின் தலைகளை கழிப்பறைக்குள் நுழைப்பது மற்றும்முடிகளை வெட்டுவது போன்ற கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர்.

சிறுவர்கள் கதறி அழும் சத்தம் அக்கம்பக்கத்தில் கேட்க அவர்கள் இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் இனிஸ் மற்றும் ரோசாவை கைது செய்தனர். சிறுவர்கள் அனைவரையும் மீட்டனர். இல்லத்தில் இருந்த கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!