மீண்டும் அந்தோனியார் தரிசனம்!

ஈஸ்டர் நாளன்று குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் நேற்று, பகுதியளவில் பிரார்த்தனைக்காக திறந்து விடப்பட்டது. சேதமடைந்த தேவாலயம் திருத்தப்பட்டு வரும் நிலையில், ஒரு பகுதியில் அந்தோனியாரை தரிசிக்க பக்தர்கள் நேற்றுக்காலை தொடக்கம் அனுமதிக்கப்படுகின்றனர்.

கடற்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், காலை 7 மணிமுதல், மாலை 7 மணிவரை அந்தோனியாரை தரிசிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!