ஆண்களுக்கான ‘மீண்டூ’ என்ற இயக்கத்தை தொடங்கிய இளைஞர்கள்!

ஆண்களுக்கு எதிராக பழிதீர்ப்பதற்காக, பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறி மென் டூ ((#men too)) என்ற இயக்கத்தை, சமீபத்தில் பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள் துவங்கியுள்ளனர். நடிகர் கரண் ஓபராய் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து, அவரது நண்பர்கள் சிலர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் புகார் அளித்த பெண்ணும் தங்கள் நண்பரும் காதலித்து வந்ததாகவும், இருவரும் பிரிந்த நிலையில் தற்போது பொய்ப்புகார் அளித்துள்ளதாகவும் கூறினர்.

மேலும் சமீப காலமாக ஆண்களுக்கு எதிராக போலி பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதுபோன்ற போலி வழக்குகள் சிலவற்றில் உயர்நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டினர். போலிக்குற்றச்சாட்டுகளை சுமத்தி, சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மென் டூ இயக்கத்தை தொடங்கிய அக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!