யாழ்ப்பாணத்தில் வீடு வீடாக சோதனை – குடும்ப விபரங்களை திரட்டும் இராணுவம்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தினரும் பொலிசாரும், இணைந்து வீடு வீடாகத் தேடுதல்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். அத்துடன், வீடுகளின் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களையும், அடையாள அ்ட்டை தொடர்பான பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் நேற்று மாலை பொலிஸாா் மற்றும் இராணுவத்தினா் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனா். வல்வெட்டித்துறையில் நிலை கொண்டுள்ள முதலாவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 521 ஆவது படையணியின் இராணுவத்தினா் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனா். இதற்கு அச்சுவேலி பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனா். வீட்டு உறுப்பினா்களின் எண்ணிக்கை மற்றும் அடையாள அட்டை பதிவுகள் என்பதும் பொலிஸாாினால் பதிவு செய்யப்பட்டது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள், பதிவுகளால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!