வீடு புகுந்து கல்லூரி மாணவி குத்தி கொலை..! – பரபரப்பு சம்பவம்!

கடலூர் மாவட்டம் விருதாச்சாலம் அருகே வீடு புகுந்து கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பள்ளிப்பருவ நட்பு கொலையில் முடிந்த பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி. விருத்தாசலம் தனியார் கல்லூரியில் படித்துவந்தார். இந்த நிலையில் திலகவதி வீட்டில் தனியாக இருக்கும் போது யாரோ அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்று விட்டார். அவரது உறவினர்கள் திலகவதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர் அங்கு சிகிச்சைபலனின்றி திலகவதி பரிதாபமாக பலியானார். முன்னதாக மாணவி தெரிவித்த தகவலின் பேரில் கொலையாளி யார் என்பது அடையாளம் காணப்பட்டது.

இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் திலகவதியை வீடுபுகுந்து கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது பள்ளி பருவ நண்பர் பேரலையூரை சேர்ந்த ஆகாஷ் என்பவனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒன்பதாம் வகுப்பில் இருந்து திலகவதியும் ஆகாஷும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் திலகவதியை விரட்டி விரட்டி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் ஆகாஷ். பள்ளியில் ஒழுங்காக படித்து தேர்ச்சி பெற்றதால் திலகவதி தனியார் கல்லூரியில் சேர்ந்த நிலையில், ஆகாஷ் பள்ளில் பள்ளிப்படிப்பை முடித்தாலும், மேல் படிப்பில் சேராமல் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு ஊதாரி தனமாக சுற்றியுள்ளான்

இருந்தாலும் அவனோடு திலகவதி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் ஆகாஷுக்கும் திலகவதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆகாஷுடன் பேசுவதை நிறுத்திய திலகவதி, அவரது வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து தனக்கு தகவல் வராமல் இருக்க ஆகாஷ் எண்ணை தடை செய்துள்ளார்.

செல்போனிலும் திலகவதியை தொடர்பு கொள்ள இயலாததால் தவித்து வந்த ஆகாஷ் கடும் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று கல்லூரி முடிந்து திரும்பிய திலகவதி , ஆகாஷை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை தனக்கு சாதகாமாக்கிக் கொண்ட ஆகாஷ் தன்னை தவிக்க விட்ட திலகவதியை பழிவாங்கும் நோக்கத்தோடு கத்தி ஒன்றை மறைத்து எடுத்துச்சென்றுள்ளான்.

ஊதாரி தனமாக சுற்றினால் தன்னிடம் பேச வேண்டாம் என்று கூறிய அவர், மேல் படிப்பில் சேர்ந்து படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆந்திரம் அடைந்த ஆகாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திலகவதியை சரமாரியாக குத்தி சாய்த்து விட்டு தப்பி ஓடியது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் கொல்லப்பட்ட திலகவதியின் உறவினர்கள் தங்கள் வீட்டு பெண் பிள்ளையின் கொடூர மரணத்தின் உண்மையான காரணத்தை கண்டறியக் கோரியும், இந்த கொலை சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் அவரது சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் விருத்தாச்சலம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பள்ளி பருவத்தில் மாணவர்களுடன் நட்புடன் பழகுவதோடு மாணவிகள் நிறுத்திக் கொள்வது நலம் அதை விடுத்து தீய நோக்கத்துடன் காதல் வலைவிரிக்கும் ஊதாரி இளைஞர்களுடன் வாட்ஸ் ஆப்பிலும், செல்போனிலும் நேரத்தை செலவிட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்துள்ளது இந்த கோரச்சம்பவம்..!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!