தாவடி பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் வெடிபொருட்கள்!

யாழ்ப்பாணம், தாவடி பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்திலிருந்து வெடிபொருட்கள், வயா்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் சுன்னாகம் பொலிஸாா் மேற்கொண்டிருந்த தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். 9 மி.மீற்றா் துப்பாக்கி ரவை கூடு மற்றும் 5 தோட்டாக்கள், வயா்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!