பெண்ணை காதலிப்பதாகக் கூறிய தடகள வீராங்கனை!

உறவுக்காரப் பெண்ணை காதலிப்பதாக ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் கூறியதை அடுத்து, வீட்டில் இருந்து அவரை வெளியேற்ற முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறார். இந்த நிலையில் அவர் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வெளிப்படையாகக் கூறி அதிர வைத்தார்.

இந்தச் சூழலில், தன்னை வீட்டில் இருந்து வெளியேற்ற தனது மூத்த சகோதரி முயற்சி செய்து வருவதாக டூட்டி சந்த் குற்றம்சாட்டியுள்ளார். தன்னை சிறைக்கு அனுப்பவும் மூத்த சகோதரி திட்டமிட்டிருப்பதாகவும் டூட்டி சந்த் புகார் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!