பிரதமருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினரால் தாக்கல் செய்யப்ட்ட இந்த மனுவே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இம் மனு முன்பதாக விசாரணைக்கு வந்த போது, வழக்கில் சாட்சியாக முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் மூலப் பிரதிகள் தாக்கல் செய்யப்படாததால் அதனை விசாரணை செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி அடிப்படை ஆட்சேபனை கருத்து வெளியிட்டிருந்தார்.

அத்தோடு நீதிமன்றம் குறித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!