சவூதிக்கு வேலை தேடிச் சென்ற இந்தியாவை சேர்ந்த 26 வயது பெண் மர்ம மரணம்!

ஹைதராபாத்தில் இருந்து சவூதிக்கு வேலை தேடிச் சென்ற 26 வயது இளம் பெண் நஸ்-ரீன் பாத்திமா மர்மமான முறையில் உயிரிழந்தார். விபத்தில் சிக்கி வீட்டிலேயே இருக்கும் கணவன், 2 குழந்தைகளை விட்டுவிட்டு வெளிநாடு சென்றவர் உயிரிழந்த நிலையில், பாத்திமாவின் மரணம் குறித்து 2 நாட்கள் வரை அவருடைய குடும்பத்திற்கு தகவல் தரப்படவில்லை. உயிரிழப்புக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அணுகியுள்ள நஸ்-ரீன் பாத்திமா வின் குடும்பத்தினர் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதாகவும், உடலை அங்கேயே புதைக்கும்படியும் தங்கள் வலியுறுத்தப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினையில் தங்களுக்கு உதவும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!