மூன்று எரிவாயு மின் திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி

மூன்று திரவ இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

தேசிய பொருளாதாரச் சபையின் பரிந்துரைக்கமைய, அம்பாந்தோட்டையில், மூன்று இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைக்கப்படுவதற்கு அனுமதி கோரப்பட்டது.

தலா 400 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின்திட்டங்கள் சீனா மற்றும் இந்தியாவின் உதவியுடனும், 500 மெகா வாட் திறன் கொண்ட மற்றொரு மின் திட்டம் ஜப்பானிய அரசின் உதவியுடனும் நிறுவப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!