ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால் சிறுவனை கொலை செய்த வாலிபர்!

நெல்லை அருகே உள்ள தாழையூத்தை அடுத்த குறிச்சி குளத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி தளவாய் (வயது35). இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்தனமாரி (15), இளைய மகன் கொம்பையா (9). பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கொம்பையா கடந்த 26-ந்தேதி ஊருக்கு வெளியே நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அன்று மாலை அனைத்து சிறுவர்களும் வீடு திரும்பி விட்டனர். கொம்பையா மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொம்பையாவை தீவிரமாக தேடினார்கள். எங்கும் அவனை காணாததால், மறுநாள் 27-ந்தேதி தளவாய் தாழையூத்து போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நாரணம்மாள்புரம் புறவழிச்சாலையில் உள்ள அய்யா கோவில் அருகே புதரில் ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு பிணமாக கிடந்தது காணாமல் போன சிறுவன் கொம்பையா என்பதும், அவனை யாரோ தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்ததும், உடலை புதரில் வீசி சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொம்பையாவின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு திரண்டு வந்து கதறி அழுதனர். கொம்பையா செல்போனில் நண்பர்களுடன் சேர்ந்து ‘டிக்டாக்’ பதிவு அடிக்கடி வெளியிடுவது வழக்கம். இதனால் அந்த பகுதியில் கொம்பையாவை தெரியாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் அன்பாக பழகி வந்துள்ளான்.

இந்த நிலையில் அவன் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கொலையாளியை கண்டறிந்து கைது செய்ய துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொம்பையா கடைசியாக யாருடன் சேர்ந்து விளையாடினான், யாருடனாவது மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றானா, கடைசியாக பார்த்தது யார் என்று துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அதில் அதே பகுதியை சேர்ந்த அறுவடை எந்திர டிரைவர் மாயாண்டி (20) என்ற வாலிபர் குடிபோதையில் கொம்பையாவுடன் பேசி அழைத்து சென்றது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மாயாண்டியை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் கொம்பையாவை கொலை செய்ததை மாயாண்டி ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் மாயாண்டியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாயாண்டியிடம் இன்று காலை வரை விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கொம்பையா என்னிடம் அடிக்கடி செல்போன்களை வாங்கி விளையாடுவான். அது போல சம்பவத்தன்று எனது செல்போனில் விளையாடிய போது, குடிபோதையில் இருந்த எனக்கு சிறுவன் கொம்பையா மீது ஓரின சேரிக்கை ஆசை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கொம்பையாவிடம் செல்போன் ஆசையை தூண்டி தனியாக நான்கு வழிச்சாலை அருகே உள்ள மறைவிடத்துக்கு அழைத்து சென்றேன்.

அங்கு வைத்து சிறுவன் கொம்பையாவிடம் ஓரினச்சேரிக்கையில் ஈடுபட்டேன். அவன் எனக்கு ஒத்துழைக்காமல் எதிர்ப்பு தெரிவித்தான். இதனால் கொம்பையாவை தாக்கி வலுக்கட்டாயமாக ஈடுபட முயன்ற போது, அவன் மயக்கம் அடைந்தான். இதனால் வெளியே தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று அருகில் கிடந்த கல்லை எடுத்து அவனது தலையில் போட்டு கொலை செய்தேன். பின்னர் அவனது உடலை புதரில் மறைத்து போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல ஊருக்கு சென்றேன். அங்கு அனைவரும் கொம்பையாவை தேடிய போது நானும் அவர்களுடன் சேர்ந்து தேடுவது போல் நடித்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று மாயாண்டியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான மாயாண்டியை போலீசார் இன்று பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!