இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடெல்லியில் நேற்று இதனை உறுதிப்படுத்தினார்.
இரண்டு நாட்கள் பயணமாக இந்தியப் பிரதமர் மாலைதீவுக்கும் சிறிலங்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். “மாலைதீவுக்கான பயணத்தின் ஒரு கட்டமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கும் வரவுள்ளார். அவர் ஜூன் 9ஆம் நாள் இலங்கை வருவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று புதுடெல்லியில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!