வெளிநாடுகளுடன் உடன்பாடு – பௌத்த பீடங்களுடன் இணைந்து கத்தோலிக்க திருச்சபையும் எதிர்ப்பு!

இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எந்தவொரு வெளிநாட்டுடனும் உடன்படிக்கை செய்து கொள்வதற்கு அஸ்கிரிய, மல்வத்தை மகாநாயக்க தேரர்களும், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கண்டி அஸ்கிரிய பீடம் மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களுக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பு ஒன்றின் போதே, இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!