சாரதியில்லாது சென்ற ரயில் விபத்து : பலர் காயம்

ஜப்பானில் இன்று காலை 8.30 மணியளவில் தவறான திசையில் பயணித்த ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.

சிங் சுகிட்ட எனும் ரயில் நிலைத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இவ்விபத்தில் 14 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சாரதி இல்லாமல் இயக்கப்படும் ரயில் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் 50 பயணிகள் வரை பயணித்த இந்ந ரயில் வண்டி வேறு திசையை நோக்கி செல்ல முயற்சித்தபோது பாதுகாப்பான முறையில் நிறுத்த முட்பட்டபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!