பஸ் கட்டணங்களும் உயர்கிறது!

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால், அதிகரிக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மிக குறைந்த கட்டணமான 10 ரூபாய் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அடுத்தவாரமளவில் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!