ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் தொகை 254 ஆக அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது. கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் பெர்னாந்து என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்தே, பலியானோர் தொகை 254 ஆக உயர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!