சிறிலங்கா அதிபர் கம்போடியா பறக்கிறார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத இறுதியில் கம்போடியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கம்போடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்றே சிறிலங்கா அதிபர், இரண்டு நாட்கள் பயணமாக நொம்பென்னுக்கு செல்லவுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் நாள் அவர் கம்போடியாவுக்குப் புறப்பட்டுச் செல்வார் என்றும், 27ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் அதிபர் செயலக தகவல்கள் கூறுகின்றன.

கடந்தவாரம் தஜிகஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர், நேற்றைய தினமே நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!