வெலிகந்தவில் கோர விபத்து – 4 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் பலி!

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் வெலிகந்த பகுதியில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். டிரக்டர் ஒன்றும் வான ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர். மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!