ஒரு வாரத்துக்குள் தீர்வு காணாவிட்டால் பதவி விலகுவேன்! -கோடீஸ்வரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்கு இந்த வாரத்திற்குள் சாதகமான தீர்வு கிடைக்காவிட்டால் கட்சியையும் பார்க்க மாட்டேன், நாடாளுமன்ற உறுப்பினரானப் பதவி வகிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வேன் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தின் போது நேற்று பிரதமரினால் வழங்கப்பட்ட தீர்வினை போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளாதனையடுத்தே பாராளுமன்ற உறப்பினர் குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!