மும்பையில் வீட்டினுள் கண்டெடுக்கப்பட்ட தாய், மகன் சடலம்!

மும்பையைச் சேர்ந்தவர் வைகண்டேஷ்வரன்(42). இவரது தாய் மீனாட்சி ஐயர்(75). இருவரும் மும்பையின் மீரா குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகின்றனர். இருவரும் வீட்டில் இருப்பதற்கான அடையாளங்கள் 4 நாட்களாக இல்லை. எனவே, அக்கம் பக்கத்தினர் இருவரும் வெளியூர் சென்றிருப்பார்கள் என நினைத்து இருந்துள்ளனர். பின்னர் மீனாட்சியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த குடியிருப்புப்பகுதிக்கு விரைந்த போலீசார், வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மீனாட்சி, வைகண்டேஷ்வரன் ஆகியோரின் சடலம் இருந்துள்ளது.

மீனாட்சியின் சடலம் குளியல் அறையில் ரத்தத்தில் மிதந்துள்ளது. மகனின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை. இதையடுத்து இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பார்களா, அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அருகில் போலீசார் விசாரித்தனர்.

அவரது வீட்டில் ஆதாரம் ஏதும் கிடைக்குமா? என போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். வைகண்டேஷ்வரனின் லேப்டாப்பில் குறிப்பு ஒன்று சிக்கியது. இதில், தாயை கொன்றுவிட்டு, தானே தற்கொலை செய்து கொண்டதாக வைகண்டேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வைகண்டேஷ்வரன் இப்படி செய்ய காரணம் என்ன என்பதை விசாரித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!