ஆப்கான் இரணுவத்தினர் அதிரடி : 10 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகள் மீது படையினர் மேற்கொண்ட வான்வலித்தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

பாக்டியா மாகாணத்தின் கார்டாசிரா மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை குறிவைத்து, இராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

இதில் 10 பயங்ரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரவிக்கின்றன.மேலும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுத கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.

நேட்டோ படைகளின் உதவியோடு ஆப்கானிஸ்தான் படையினர் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தரைவழியாகவும், வான் வழியாகவும் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!