முத்தையன்கட்டில் மின்னல் தாக்கி சிறுவன் பலி!

????????????????????????????????????
முல்லைத்தீவு- முத்தையன்கட்டு, ஜீவநகர் அம்மன் கோவில் பகுதியில் மின்னல் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்தார். முத்தையன் கட்டு இடதுகரை அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் தரம் 9இல் கல்வி கற்கும் பி.தினேஸ்குமார் என்ற 14 வயது மாணவனே உயிரிழந்தவராவார்.

நேற்று பிற்பகல் வீட்டு முற்றத்தில் நின்ற சிறுவன் மீன்னல் தாக்கியதால் ஆபத்தான நிலையில், ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த மாணவனின் தந்தை இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்துள்ளதுடன் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!