தெரிவுக்குழுவுக்கு வராவிட்டால் தயாசிறி மீது சட்ட நடவடிக்கை!

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவுக்கு சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர வராவிடின் சட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சாட்டுவதால் ஒருபோதும் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது. அரசியல் இலாபத்திற்காகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.

குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி என்ற வகையில் நிச்சயம் சாட்சியமளிக்க வேண்டும். பிரதமர் , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ, முன்னாள் சட்டவொழுங்கு அமைச்சர் ஆகியோரும் அழைக்கப்படுவார்கள். இதன் பின்னர் பாராளுமன்ற தெரிவு குழு பாராளுமன்றத்திற்கு உரிய அறிக்கையினை சமர்ப்பிக்கும் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!