மழைக்கு ஒதுங்கிய வேளை -இருவருக்கு நேர்ந்த அவலம்!!

மழைக்கு கொட்டகை ஒன்றில் ஒதுங்கி நின்றவர்கள் மீது கொடடகை சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உறவினரின் உடலை அடக்கம் செய்யச் சென்றவர்கள், அங்கு மழை பெய்ததால் மயானத்தில் இருந்த கொட்டகையில் ஒதுக்கினர். திடீரென்று கொட்டகை பயங்கர சத்தத்துடன் இடிந்து இருவர் மீது விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்தச் சம்பவம் இந்தியா நெல்லை மாவட்டம் மானூரில் நடந்துள்ளது. தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!