6 ஆண்டுகளுக்கு முன் நிலநடுக்கத்தினால் உருவான தீவு திடீரென கடலில் மூழ்கியது!

பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கியுள்ளது, நாசாவின் செயற்கைக் கோள் படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. 2013-ம் ஆண்டு பாகிஸ்தானின் க்வாதார் துறைமுகத்திற்கு அருகே ஏற்பட்ட 7 புள்ளி 7 ரிக்டர் நிலநடுக்கத்தில் 825 பேர் உயிரிழந்தனர். கடலுக்கு அடியில் டெக்டானிக் தட்டு நகர்ந்தபோது, திடீரென மண், பாறைகள் ஒருவித வாயுவுடன் வெளியேறி ஒரு தீவாக உருவானது.

ஸல்ஸலா கோ என பெயரிடப்பட்ட அந்த தீவில் சேறு எரிமலை போல் பொங்கி வந்ததை பலரும் சென்று பார்த்து சென்றனர். வாயுவோடு எரிமலை உருவான போது அங்கிருந்த மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் செத்துக் கிடந்தன. சேறு கொதிக்கும் இடத்தில் தீயைப் பற்றவைத்தால் அது வாயு வெளியேற்றத்துக்கு ஏற்ப குபுகுபுவென பற்றி எரிந்தது.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் உருவான அந்த தீவு காலப் போக்கில் கடலில் மூழ்கியுள்ளது. செயற்கைக் கோள் புகைப்படங்களை காலத்துக்கு ஏற்ப ஒப்பிட்டு பார்க்கையில் தீவு இருந்த இடமே தெரியாமல் போயுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!