எபோலா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று உலக நாடுகளை எச்சரித்தது உலக சுகாதார நிறுவனம்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 2013ஆம் ஆண்டு ‘எபோலா’ நோய் பரவியது. முதலில் கினியா நாட்டில் பரவிய நோய் பின்னர் சியாரா லியோன், லைபிரியா, காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் பரவியது.
2016ஆம் ஆண்டு வரை இந்த நோய் தொடர்ந்து பரவி வந்தது. 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 11 ஆயிரத்து 310 பேர் உயிரிழந்தனர். 2016ஆம் ஆண்டு பிற்பகுதியில் எபோலா ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஆனால் காங்கோவில் ஏபோலாவின் தாக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் அவதானிக்கப்பட்டது. காங்கோவில் அண்மையில் மர்மச் சாவடைந்த 36 பேரில் 18 பேர் எபோலாவால் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து ஆரம்பத்திலேயே நோயைக் கட்டுக்குள் கொண்டுவர உலக சுகாதார நிறுவனம் கடும் முனைப்புக்காட்டி வருகிறது. இதையடுத்தே இந்த நோய் குறித்து கடும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!