அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணைக்கு நாங்கள் வாக்களிப்போம் : செஹான்

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை, நீத்துப்போகும் அரசாங்கத்தை உறுதிப்படுத்துவதற்கா என்ற சந்தேகம் இருக்கின்றது. என்றாலும் நாங்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்துக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிராக மஹிந்த ராஜபக்ஷ உட்பட நாங்கள் ஆரம்பம் முதல் உண்மாயாக எதிர்த்து வந்தோம். தற்போது எதிர்த்து வருகின்றோம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கையே மேற்கொண்டுவந்திருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!