வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோட்டம்!

வவுனியாவில் சிறைச்சாலையில் இருந்து சிறைக்கைதி ஒருவர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தப்பியோடியமையினால் பரபரப்பு ஏற்பட்டது. ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கொழும்பை சேர்ந்த வீரசிங்கம் முதியன்சலாகே பியந்தஅப்புகாமி என்ற நபரே தப்பி சென்றுள்ளார்.

இவர் உள்ளிட்ட சிறைக்கைதிகள் பலர் சிறைச்சாலையை சுற்றிய பகுதிகளை சுத்தப்படுத்தி கொண்டிருந்தனர். வேலைசெய்த இடத்திலிருந்து கைதி பல மணி நேரமாக திரும்பாததால் சிறைக்காவலர் சென்று பார்த்தபோது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்ற இக்கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் தப்பிச் சென்ற கைதியை தேடி கண்டு பிடித்து சிறைச்சாலைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன் பின்னணியில் யாரும் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!