ஈராக்கில் துருக்கி துணை தூதர் உள்பட 3 அதிகாரிகள் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

ஈராக்கின் வடமேற்கு பகுதியில் உள்ள குர்திஸ் பிராந்தியத்தின் தலைநகர் இர்பில் நகரில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே பிரபல ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஈராக்குக்கான துருக்கி துணை தூதர் மற்றும் 2 தூதரக அதிகாரிகள் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஓட்டலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் அவர்கள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதன்பின்னர் தாக்குதல் நடத்திய 3 பேரும் ஓட்டலின் பின்புறமாக தப்பி ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் துணை தூதரும், தூதரக அதிகாரிகள் இருவரும் பலியாகினர். தாக்குதல் நடத்திய நபர்கள் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்து ஈராக் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!