பிளவுபட்டுக் கிடக்கும் தமிழருக்கு விமோசனம் என்பது எட்டாக்கனி

ஈழத் தமி­ழர்­க­ளின் ஒற்­று­மை­யீ­னம் அனை­வ­ருக்கும் தெரிந்த ஒன்­று­தான். தமது உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டு­வ­தி­லி­ருந்து முள்ளி வாய்க்­கால் நினை வேந்­தல்­வரை இவர்­கள் தமது ஒற்­று­மை­யீ­னத்தை உல­க­றி­யச் செய்து விட்­டார்­கள்.

தமி­ழர்­க­ளைப் பற்றி நன்கு புரிந்து வைத்­தி­ருக்­கின்ற ஆட்­சி­யா­ளார்­கள் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தில் அக்­க­றை­யின்­றிக் காணப்­ப­டு­கின்­ற­னர்.

ஒற்­று­மையை இழந்து காணப்­ப­டு­கின்ற தமி­ழர்­க­ளால் எதை­யுமே செய்­து­விட முடி­யாது என்­பதே அவர்­க­ளது கணிப்­பா­க­வும் உள்­ளது.

ஒரு காலத்­தில் சாதிப் பிரச்­சினை தமி­ழர்­கள் மத்­தி­யில் பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துக் காணப்­பட்­டது.

ஒரு பகுதி மக்­கள் சாதி­யின் பெய­ரால் ஒதுக்கி வைக்­கப்­பட்­ட­னர். உயர் சாதி­யி­ன­ரின் கரங்­க­ளில் அதி­கா­ரம் இருந்­த­தால் தாம் நினைத்­த ­வாறு நடப்­ப­தற்கு அவர்­க­ளால் முடிந்­தது.

ஒதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த அந்த மக்­கள் பொரு­ளா­தார ரீதி­யில் பல­வீ­ன­முற்­ற­வர்­க­ளாக இருந்­த­தால் உயர் சாதி­யி­னரை அண்­டிப் பிழைக்க வேண்­டிய நிலை­யும் காணப்­பட்­டது.

காலப்­போக்­கில் சாதி­யம் மறைந்­து­போ­கா­மல் இருந்­தா­லும் அதன் வீரி­யத்­தில் தளர்வு ஏற்­ப­டத்­தான் செய்­தது.

அடக்­கி­யொ­துக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த மக்­கள் கல்­வி­யி­லும் பொரு­ளா­தா­ரத்­தி­லும் படிப்­ப­டி­யாக முன்­னேற்­றம் கண்­ட­தால் தமது சொந்­தக் கால்­க­ளில் நிற்­ப­தற்கு அவர்­க­ளால் முடிந்­தது.

இன்று கூட சாதிப் பாகு­பா­டு­கள் காணப்­ப­டு­கின்ற போதி­லும் சாதி ரீதி­யான அடக்கு முறை­க­ளைக் காண முடி­ய­வில்லை. ஆயி­னும் சாதி அடிப்­ப­டை­யி­லான பிள­வு­கள் இருக்­கத்­தான் செய்­கின்­றன.

ஒற்­று­மை­யின்மை பெரும் சாபக்­கேடு

தமி­ழர்­க­ளின் உரி­மைப் போராட்­டங்­கள் தோல்­வி­ய­டைந்­த­மைக்கு அந்த மக்­க­ளி­டம் காணப்­பட்ட ஒற்­று­மை­யி­னமே முதன்­மைக் கார­ண­மா­கும். தமது உரி­மை­க­ளைப் பெறு­வ­தற்­குக் கூட ஒற்­று­மை­யு­டன் செயற்­ப­டாத இவர்­கள் இனி­யா­வது ஒற்­று­மை­யு­டன் செயற்­ப­டு­வார்­களா? என்­பது சந்­தே­கத்­துக்­கி­ட­மா­னது.

படித்­த­வர்­கள், பண்­புள்­ள­வர்­கள், தமது கலா­சா­ரத்­தைப் பேணிக் காப்­ப­தில் வல்­ல­வர்­கள் என்­றெல்­லாம் புக­ழப்­ப­டும் தமி­ழர்­க­ளி­டத்­தில், ஒற்­றுமை நில­வா­த­தால் அவர்­க­ளின் விவ­கா­ரங்­கள் பல­வும் தோல்­வி­யில் முடி­கின்­றன.

ஒற்­று­மைக்கு எடுத்­துக் கூட்­டாக விளங்­கு­ப­வர்­கள் சீன மக்­கள் என்­பதை சொல்­லித்­தான் தெரி­ய­வேண்­டும் என்­ப­தில்லை. உல­கின் அதிக மக்­கள் தொகை­யைக் கொண்ட அந்த நாடு பொரு­ளா­தா­ரத்­தி­லும், இராணு வப் படை பலத்­தி­லும் முதன்மை இடத்­தைப் பிடிப்­ப­தற்­கான வாய்ப்­புக்­க­ளைக் கொண்­டுள்­ளது.

ஆசிய நாடு­க­ளில் ஒன்­றான சீனா மேற்­கத்­திய நாடு­க­ளைப் பின்­தள்­ளிட்ட இந்­தச் சாத­னை­யைப் புரிந்­துள்­ளது. இதற்கு அந்த நாட்டு மக்­க­ளின் ஒற்­றுமை நிறைந்த அர்ப்­ப­ணிப்பு நிறைந்த உழைப்பே முதன்­மைக் கார­ண­மா­கும். அவர்­கள் தமது தலை­வர்­க­ளைப் பின்­பற்றி நடப்­ப­தில் ஒரு­போ­துமே தவ­றி­ய­தில்லை.

சிறந்த கொள்­கைப் பற்­றும் இவர்­க­ளி­டம் காண­மு­டி­கின்­றது. ஆனால் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் சீன மக்­க­ளின் இத்­த­கைய பண்­பு­களை அவர்­க­ளி­டம் காண முடி­ய­வில்லை. இதுவே அவர்­க­ளின் தோல்­வி­க­ளுக்­கும் கார­ண­மாக அமைந்து விட்­டது.

முள்­ளி­வாய்க்­கால் முரண்­டு­பி­டிப்­புக்­கள்

இறு­திப் போரின்­போது தமி­ழர்­கள் பல்­லா­யி­ரக் கணக்­கில் ஈவு இரக்­க­மின்­றிக் கொல்­லப்­பட்­ட­தற்­குச் சாட்­சி­யாக முள்ளி வாய்க்­கால் காணப்­ப­டு­கின்­றது.

இறு­திப்­போ­ரில் உயி­ரி­ழந்­த­வர்­களை நினைவு கூரு­மு­க­மாக ஆண்டு தோறும் மே மாதம் 18ஆம் திகதி நினை­வேந்­தல் நிகழ்வு இங்கு இடம் பெறு­கின்­றமை வழக்­கம். ஆனால் இந்த ஆண்டு இதி­லும் முரண்­பா­டு­கள் தோன்­றி­யுள்­ளன.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ ரும், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ரும் இந்த விட­யத்­தில் முரண்­பட்டு நிற்­கின்­ற­னர். இந்த இரண்டு பகு­தி­யி­ன­ருக்­கும் இடை­யில் அறிக்­கைப்­போர் தொடர்­கின்­றது.

எவ­ருமே விட்­டுக் கொடுப்­தா­கத் தெரி­ய­வில்லை. போரில் அநி­யா­ய­மா­கக் கொல்­லப்­பட்­ட­வர்­களை நினைவு கூரு­வ­தில்­கூட முரண்­பா­டு­கள் தோன்­றி­யுள்­ளமை அவ­மா­னத்­துக்­கு­ரி­யது.

தமி­ழர்­க­ளின் இன்­னல்­கள் நீங்­கிப் பிரச்­சி­னை ­க­ளுக்­குத் தீர்வு கிடைக்க வேண்­டு­மென்­றால் முத­லில் அவர்­கள் தமக்­குள் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

ஒரு தலை­வ­னின் கீழ் அணி­தி­ரண்டு தமது பிர­ச் சினைக­ளுக்­குத் தீர்வு காண்­ப­தற்­கான போராட்­டத்­தில் ஈடு­பட வேண்­டும். இதை விடுத்து ஆளுக்­கொரு பக்­க­மாக நின்று குரல் கொடுப்­ப­தால் எவ்­வித பய­னும் கிடைக்­கவே மாட்­டாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!