ஈழத் தமிழர்களின் ஒற்றுமையீனம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமது உரிமைகளுக்காகப் போராடுவதிலிருந்து முள்ளி வாய்க்கால் நினை வேந்தல்வரை இவர்கள் தமது ஒற்றுமையீனத்தை உலகறியச் செய்து விட்டார்கள்.
தமிழர்களைப் பற்றி நன்கு புரிந்து வைத்திருக்கின்ற ஆட்சியாளார்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அக்கறையின்றிக் காணப்படுகின்றனர்.
ஒற்றுமையை இழந்து காணப்படுகின்ற தமிழர்களால் எதையுமே செய்துவிட முடியாது என்பதே அவர்களது கணிப்பாகவும் உள்ளது.
ஒரு காலத்தில் சாதிப் பிரச்சினை தமிழர்கள் மத்தியில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துக் காணப்பட்டது.
ஒரு பகுதி மக்கள் சாதியின் பெயரால் ஒதுக்கி வைக்கப்பட்டனர். உயர் சாதியினரின் கரங்களில் அதிகாரம் இருந்ததால் தாம் நினைத்த வாறு நடப்பதற்கு அவர்களால் முடிந்தது.
ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த மக்கள் பொருளாதார ரீதியில் பலவீனமுற்றவர்களாக இருந்ததால் உயர் சாதியினரை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலையும் காணப்பட்டது.
காலப்போக்கில் சாதியம் மறைந்துபோகாமல் இருந்தாலும் அதன் வீரியத்தில் தளர்வு ஏற்படத்தான் செய்தது.
அடக்கியொதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் படிப்படியாக முன்னேற்றம் கண்டதால் தமது சொந்தக் கால்களில் நிற்பதற்கு அவர்களால் முடிந்தது.
இன்று கூட சாதிப் பாகுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் சாதி ரீதியான அடக்கு முறைகளைக் காண முடியவில்லை. ஆயினும் சாதி அடிப்படையிலான பிளவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஒற்றுமையின்மை பெரும் சாபக்கேடு
தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் தோல்வியடைந்தமைக்கு அந்த மக்களிடம் காணப்பட்ட ஒற்றுமையினமே முதன்மைக் காரணமாகும். தமது உரிமைகளைப் பெறுவதற்குக் கூட ஒற்றுமையுடன் செயற்படாத இவர்கள் இனியாவது ஒற்றுமையுடன் செயற்படுவார்களா? என்பது சந்தேகத்துக்கிடமானது.
படித்தவர்கள், பண்புள்ளவர்கள், தமது கலாசாரத்தைப் பேணிக் காப்பதில் வல்லவர்கள் என்றெல்லாம் புகழப்படும் தமிழர்களிடத்தில், ஒற்றுமை நிலவாததால் அவர்களின் விவகாரங்கள் பலவும் தோல்வியில் முடிகின்றன.
ஒற்றுமைக்கு எடுத்துக் கூட்டாக விளங்குபவர்கள் சீன மக்கள் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட அந்த நாடு பொருளாதாரத்திலும், இராணு வப் படை பலத்திலும் முதன்மை இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது.
ஆசிய நாடுகளில் ஒன்றான சீனா மேற்கத்திய நாடுகளைப் பின்தள்ளிட்ட இந்தச் சாதனையைப் புரிந்துள்ளது. இதற்கு அந்த நாட்டு மக்களின் ஒற்றுமை நிறைந்த அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பே முதன்மைக் காரணமாகும். அவர்கள் தமது தலைவர்களைப் பின்பற்றி நடப்பதில் ஒருபோதுமே தவறியதில்லை.
சிறந்த கொள்கைப் பற்றும் இவர்களிடம் காணமுடிகின்றது. ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரையில் சீன மக்களின் இத்தகைய பண்புகளை அவர்களிடம் காண முடியவில்லை. இதுவே அவர்களின் தோல்விகளுக்கும் காரணமாக அமைந்து விட்டது.
முள்ளிவாய்க்கால் முரண்டுபிடிப்புக்கள்
இறுதிப் போரின்போது தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்டதற்குச் சாட்சியாக முள்ளி வாய்க்கால் காணப்படுகின்றது.
இறுதிப்போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருமுகமாக ஆண்டு தோறும் மே மாதம் 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு இங்கு இடம் பெறுகின்றமை வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதிலும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
வடக்கு மாகாண முதலமைச்ச ரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும் இந்த விடயத்தில் முரண்பட்டு நிற்கின்றனர். இந்த இரண்டு பகுதியினருக்கும் இடையில் அறிக்கைப்போர் தொடர்கின்றது.
எவருமே விட்டுக் கொடுப்தாகத் தெரியவில்லை. போரில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவதில்கூட முரண்பாடுகள் தோன்றியுள்ளமை அவமானத்துக்குரியது.
தமிழர்களின் இன்னல்கள் நீங்கிப் பிரச்சினை களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் முதலில் அவர்கள் தமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு தலைவனின் கீழ் அணிதிரண்டு தமது பிரச் சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இதை விடுத்து ஆளுக்கொரு பக்கமாக நின்று குரல் கொடுப்பதால் எவ்வித பயனும் கிடைக்கவே மாட்டாது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!