தமிழ் தேசம் வாழ வேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – வடக்கு ஆளுநர்

தமிழ் தேசம் வாழ வேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும். நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள் ஆகையினாலே பாரதி சொன்னது போல் ஏனைய மொழியை படியுங்கள் ஆனால் தமிழை தாயாக கொண்டிருங்களென வடக்கு மாகாணஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமையை தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் ‘தேசிய பால் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்’ வடமாகாண அங்குரார்ப்பண நிகழ்வு ஆளுநர் தலைமையில் இன்று (23) காலை யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இந்த திட்டம் சுமார் 4 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெறுகின்றது. வடமாகாணத்தின் 5 பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக இந்த நிகழ்வு ஒரே நேரத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

ஆரம்ப கல்விப் பிள்ளைகளின் போசணை நிலையை உயர்த்துவதற்காகவும், பிள்ளைகளை போசாக்குடனும் நலமுடனும் வளமுடனும் வாழவைக்கவேண்டும் என்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும் என்று ஆளுநர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!