நாணயத்தாள்கள் அச்சிடுவது தொடர்பில், மத்திய வங்கி ஆளுநரின் அதிரடி கருத்து

நாட்டில் நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதை தடுப்பதற்கு புதிய சட்டங்கள் மிக அவசியம் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த செயலமர்வு ஒன்றில் கருத்து வெளியிடுகையிலேயே மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கென நாணய சட்டம் திருத்தியமைக்கப்படும் என்றும் நாட்டின் பொருளாதாரம் வரலாற்று ரீதியாக குறைத்து மதிப்பிடப்பட்டு வந்திருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!