பாலியல் வன்முறை குற்றச்சாட்டிலிருந்து இளைஞரை விடுவித்த காதலியின் செல்பி

இஸ்ரேலில் பிரிட்டிஸ் யுவதியொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞன் தனது காதலியின் செல்பி மூலம் தான் நிரபராதி என நிருபித்து விடுதலையாகியுள்ளான்.

19வயது பிரிட்டிஸ் யுவதியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 12 இஸ்ரேலிய இளைஞர்கள் சைப்பிரசில் கைதுசெய்யபட்டுள்ளனர்

இதில் ஒரு இளைஞன் இவ்வாறு செல்பி மூலம் தன்னை நிராபராதி என நிருபித்துள்ளான்

குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றவேளை தனது காதலியுடன் படுக்கையறையில் காணப்படும் செல்பியை காண்பித்தே குறிப்பிட்ட இளைஞன் தான் நிரபராதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளான்.

எனது காதலியின் செல்பி என்னை காப்பாற்றியது என அந்த இளைஞன் தெரிவித்துள்ளான்

நான் எனது அறையிலிருந்தவேளை திடீர் என இரு பொலிஸார் உள்ளே நுழைந்து எனது கைக்கு விலங்கிட்டு என்னை கைதுசெய்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் எனக்கு என்ன நடக்கின்றது என்பது விளங்கவில்லை பின்னர் அவர்கள் நான் யுவதியொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினேன் என தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ள இளைஞன் எனது காதலியுடன் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் காணப்பட்ட படங்களை ஆராயுமாறு அவர்களை கேட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞர்கள் குறிப்பிட்ட யுவதியின் சம்மதத்துடனேயே தாங்கள் அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!