திருவாரூரில் தேரில் இருந்து தவறி விழுந்து குருக்கள் உயிரிழப்பு!

திருவாரூர் கமலாம்பாள் ஆலய தேரோட்ட விழாவின் போது தேரில் இருந்து தவறி கீழே விழுந்த முரளி குருக்கள் பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பரம்பரை அர்ச்சகரான முரளி குருக்கள், கமலாம்பாள் ஆடிப்பூரவிழாவிற்கு காப்பு கட்டிக்கொண்டு கடந்த 25ந் தேதி ஆடிப்பூர விழாவுக்கான கொடியேற்றினார். நேற்று மதியம் தேரோட்டத்திற்கு முன் அம்மனுக்கு அவர் பூஜைகள் செய்தார். நான்கு வீதிகளிலும் சுற்றிவந்த தேர், இரவில் தேரடிக்கு வந்து சேர்ந்ததும், தேரின் மேலே ஏறி அம்மனுக்கு தீபாரதனை காட்ட முற்பட்டார்.

அப்போது, திடீரென தேர் நகர்ந்ததால் மேலே இருந்த முரளி குருக்கள் தலைகுப்புற கீழே விழுந்தார். விழுந்த இடம் சிமெண்ட் சாலை என்பதால் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து அதிக இரத்தம் வெளியேறியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். முரளி குருக்களின் உடல் திருவாரூர் மருத்துவகல்லூரி மருவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!