இராணுவ வெற்றி தினத்தின் தேசிய நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பத்தரமுல்லை பாராளுமன்ற விளையாட்டரங்கில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெறவுள்ளது.
தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூரும் பொருட்டு இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஒளி பூஜை’ ஜனாதிபதியின் தலைமையில் பிற்பகல் 6.00 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க களனிய ரஜமகா விகாரையில் இடம்பெறும். மேலும், முப்படையையும் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான சேவா விபூஷன பதக்கம் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 9.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!